8 months ago|
General

After Independence

After Independence

Ranjith Kumar R

Author at Billianz

  • Jul 05, 2025
  • 5 min read
  • 32

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

  1. 1947 மார்ச் 23 அன்றே காங்கிரஸ் கட்சியின் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிரீமியராக (முதலமைச்சர்) பதவியேற்றார். அன்று முதல் 6. 1949 வரை இவரே முதல்வராகத் தொடர்ந்தார்.
  2. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது புனித ஜார்ஜ் கோட்டையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்பட்டது
  3. இவரே சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிய முதலாவது தமிழக முதல்வராவார்.
  4. இவரது ஆட்சியில் 1949-ல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.
  5. 1949 ஏப்ரல் 6 முதல் 1950 ஜனவரி 26வரை பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு அதிகாரத்திலிருந்தது.


இராஜாஜி

  1. தமிழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியான முதல் பொதுத்தேர்தல் 1952 மார்ச்-ல் நடைபெற்றது.
  2. மாணிக்க வேலரின் பொதுநலக்கட்சி (Commonweal Party) மற்றும் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ராமசாமி படையாச்சி ஆகியோரது ஆதரவுடன் 1952 ஏப்ரல் 12-66 இராஜாஜி முதலமைச்சரானார்.
  3. 1953 அக்டோபர் ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம் உதயமானது. 200
  4. ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப்பணியாற்றினார்.
  5. 1953-ம் ஆண்டு இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து 1954 ஏப்ரல் 13-ல் இராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்.

காமராஜர்

  1. இராஜாஜிக்கு பிறகு 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2-ம் நாள் வரை காமராஜர் தமிழக முதல்வராக அரும்பணியாற்றினார்.
  2. 1956-ல் காமராஜர் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கினார்.
  3. 1958-ல் தொழிலாளர் கூலி நிர்ணயச் சட்டம் இயற்றப்பட்டது.
  4. 1955-ல் எட்டயபுரத்தில் இலவச மதிய உணவுத் திட்டத்தை துவக்கினார் டு காமராஜர்.
  5. 1955-ல் விவசாய வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டது.
  6. 1966-ல் இயற்றப்பட்ட சென்னை குத்தகை சாகுபடியாளர்கள் (நியாய மான குத்தகை செலுத்துதல்) சட்டம், நியாயமான குத்தகையை நிர்ணயம் செய்தது.
  7. 1958-ல் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது.
  8. 1961-ல் சென்னை நில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இது நில உச்ச வரம்பை 30 ஏக்கராக நிர்ணயித்தது.
  9. 1961பிப்ரவரி 24-ல் சட்டப்பேரவையில் அரசாங்க நிர்வாக கடிதப் போக்குவரத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை இனி தமிழ்நாடு என்று எழுதப்படும்என அரசு அறிவித்தது.
  10. 1963-ல் காமராஜர் காங்கிரஸ் கட்சியை பலபடுத்துவதற்காக “காமராஜர்” திட்டம் (K-Plan or Kamaraj Plan) கொண்டு வந்தார்.
  11. அத்திட்டப்படி காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணிக்கு திரும்பினார்.

பக்தவத்சலம்

  1. காமராஜருக்குப் பிறகு தமிழக முதலமைச் சராக பதவியேற்றவர் எம்.பக்தவச்சலம் ஆவார். இவர் 1963 அக்டோபர் 2 முதல் 1967 மார்ச் 6 வரை முதல்வரக பதவி வகித்தார்.
  2. இவரே காங்கிரஸ் கட்சியின் கடைசி தமிழக முதலமைச்சராவார்.
  3. இவரது ஆட்சிக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழுவதும் பரவியது.

No comments yet

Be the first to share your thoughts!

Your Views Please!

Your email address will not be published. Required fields are marked *

You may also like

blog image
Moovalur Ramamirtham
Jul 05, 2025
blog image
Dr. Muthulakshmi Reddy
Jul 05, 2025
blog image
Dr. S Dharmambal
Jul 05, 2025