ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
- 1947 மார்ச் 23 அன்றே காங்கிரஸ் கட்சியின் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிரீமியராக (முதலமைச்சர்) பதவியேற்றார். அன்று முதல் 6. 1949 வரை இவரே முதல்வராகத் தொடர்ந்தார்.
- இந்தியா சுதந்திரம் அடைந்தபோது புனித ஜார்ஜ் கோட்டையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்பட்டது
- இவரே சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிய முதலாவது தமிழக முதல்வராவார்.
- இவரது ஆட்சியில் 1949-ல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.
- 1949 ஏப்ரல் 6 முதல் 1950 ஜனவரி 26வரை பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு அதிகாரத்திலிருந்தது.
இராஜாஜி
- தமிழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியான முதல் பொதுத்தேர்தல் 1952 மார்ச்-ல் நடைபெற்றது.
- மாணிக்க வேலரின் பொதுநலக்கட்சி (Commonweal Party) மற்றும் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ராமசாமி படையாச்சி ஆகியோரது ஆதரவுடன் 1952 ஏப்ரல் 12-66 இராஜாஜி முதலமைச்சரானார்.
- 1953 அக்டோபர் ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம் உதயமானது. 200
- ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப்பணியாற்றினார்.
- 1953-ம் ஆண்டு இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து 1954 ஏப்ரல் 13-ல் இராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
காமராஜர்
- இராஜாஜிக்கு பிறகு 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2-ம் நாள் வரை காமராஜர் தமிழக முதல்வராக அரும்பணியாற்றினார்.
- 1956-ல் காமராஜர் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கினார்.
- 1958-ல் தொழிலாளர் கூலி நிர்ணயச் சட்டம் இயற்றப்பட்டது.
- 1955-ல் எட்டயபுரத்தில் இலவச மதிய உணவுத் திட்டத்தை துவக்கினார் டு காமராஜர்.
- 1955-ல் விவசாய வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டது.
- 1966-ல் இயற்றப்பட்ட சென்னை குத்தகை சாகுபடியாளர்கள் (நியாய மான குத்தகை செலுத்துதல்) சட்டம், நியாயமான குத்தகையை நிர்ணயம் செய்தது.
- 1958-ல் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது.
- 1961-ல் சென்னை நில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இது நில உச்ச வரம்பை 30 ஏக்கராக நிர்ணயித்தது.
- 1961பிப்ரவரி 24-ல் சட்டப்பேரவையில் அரசாங்க நிர்வாக கடிதப் போக்குவரத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை இனி தமிழ்நாடு என்று எழுதப்படும்என அரசு அறிவித்தது.
- 1963-ல் காமராஜர் காங்கிரஸ் கட்சியை பலபடுத்துவதற்காக “காமராஜர்” திட்டம் (K-Plan or Kamaraj Plan) கொண்டு வந்தார்.
- அத்திட்டப்படி காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணிக்கு திரும்பினார்.
பக்தவத்சலம்
- காமராஜருக்குப் பிறகு தமிழக முதலமைச் சராக பதவியேற்றவர் எம்.பக்தவச்சலம் ஆவார். இவர் 1963 அக்டோபர் 2 முதல் 1967 மார்ச் 6 வரை முதல்வரக பதவி வகித்தார்.
- இவரே காங்கிரஸ் கட்சியின் கடைசி தமிழக முதலமைச்சராவார்.
- இவரது ஆட்சிக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழுவதும் பரவியது.