மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- 1883- ஆண்டு திருவாரூரில் பிறந்த இராமாமிர்தம் அம்மையார், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் என்ற கிராமத்தில் வளர்ந்தார். எனவே மூவலூர் இராமாமிர்தம் என்றழைக்கப்பட்டார்.
- இவர் இசை வேளாளர் குலத்தைச் சார்ந்தவர். பழங்காலத்தில் இக்குலத்தில் பிறந்த பெண்கள் இறைப்பணி மற்றும் கலைப் அர்பணிக்கப்பட்டனர். இறைப்பணி பணிக்காக இச்சமூகம் கால மாற்றத்தில் சிக்கிச் சீரழிந்தது. பிரபுகள் மற்றும் ஜமீன்தாரர்களால் அவமனப்படுத்தப்பட்டனர்.
- தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பததையும், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார். நாடு முழுவதும் தங்கள் இனப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்லி, அவர்களது விடுதலைக்கு ஆதரவு திட்டினார்.
- காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1925-ம் ஆண்டு மயிலாடுத்துறையில் இசை வேளாளர் மாநாட்டைக் கூட்டினார்.
- இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை (அல்லது) மதி பெற்ற மைனர். தாசிகளின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
- தேவதாசி முறைக்கு எதிரான இவரது போராட்டம், தமிழகப் பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெண்கள் விழிப்படையச் செய்வற்கு உறுதுணையாக அமைந்தது.
- சமூகப் பணிகளில் மட்டுமல்லாமல் தேசிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்ட அம்மையார். பெண்கள் பெருமளவில் தேசிய இயக்கத்தில் ஈடுபட ஊக்குவித்தார்.
- 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.
- இவரது அரிய உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழக அரசு ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூகத் திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் நினைவு திருமண உதவித் திட்டம் என்று பெயரிட்டு இவரைக் கௌரவித்தது.