டாக்டர் எஸ். தர்மாம்பாள்
- தஞ்சாவூருக்கு அருகில் கருன்தட்டான்குடி என்ற இடத்தில் பிறந்த தர்மாம்பாள், சித்த மருத்துவம் பயின்று சென்னையில் மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். பின்னர் பொதுச் சேவையில் ஈடுபட்டார்.
- தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இவர் விதவைகள் மறுமணம்.
- கலப்பு மணம் மற்றும் பெண்கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.
- தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
- இந்தி எதிர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டு பல முறை சிறை தண்டனை பெற்றார்.
- 1940-ம் ஆண்டு வரை சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை. ஊதியமும் உயர்த்தப்படவில்லை. எனவே இழவு வாரம் என்ற போராட்டத்தை தொடங்கினார். இதன் விளைவாக கல்வி அமைச்சராக இருந்த திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டார்.
- இவர் சென்னை மாணவர் மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.
- இவர் தமிழ்மொழி மற்றும் தமிழ்இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி இவருக்கு "வீரத்தமிழன்னை"வழங்கப்பட்டது.
- இப்பட்டம் பெற்ற தருமாம்பாள் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு "பெரியார்" என்ற பட்டத்தையும். எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு "ஏழிசை மன்னர்" வழங்கினார்.
- தருமாம்பாள் அம்மையார் தனது 69-வது வயதில் 1959-ம் ஆண்டு காலமானார்.