கேப்டன் லெட்சுமி
- கேப்டன் லெட்சுமி, லெட்சுமி சுவாமிநாதன் மற்றும் ஷேகல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட லெட்சுமி, 1914 –ம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் எஸ்.சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவரது தாயார் ஏ.வி. அம்முகுட்டி என்கிற அம்மு சுவாமிநாதன் ஒரு சமூக வேசகராவார்.
- சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று 1938-ம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்றார். 1940ல் சிங்கப்பூர் சென்ற அவர் அங்குள்ள இந்தியக் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்தார்.
- 1942-ம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் (INA) உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பிரிவான ஜான்சிராணி பெண்கள் படைப்பிரிவு 1943-ம் ஆண்டு ஜூலையில் உருவாக்கப்பட்டது.
- ஜான்சி ராணி பெண்கள் படைப்பிரிவில் சேர்ந்த லட்சுமி சுவாமிநாதன் பின்னர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- பின்னர் நேதாஜி உருவாக்கிய "ஆசாத் இந்த்" அரசாங்கம் எனப்படும் இந்திய சுதந்திரத்திற்கான தற்காலிக அரசாங்கத்தில் மகளிர் அமைப்புக்கான அமைச்சராக இருந்தார்.
- இந்திய தேசிய ராணுவத்தில் பணி யாற்றிய கலோனல் பிரேம் குமார் ஷேகல் என்பரை 1947 மார்ச்சில் மணந்த பின் கான்பூரில் வாழ்ந்து வந்தார்.
- 1971-ல் இவர் இந்தி கம்யூனிஸ் கட்சியில் (மார்க்சிய) சேர்ந்தார்.
- 2002-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில், அப்துல்கலாமை எதிர்த்து போட்டியிட்டார்.
- 1998-ம் ஆண்டு கேப்டன் லட்சுமிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.