1 year ago|
General

Reduction in repo interest rate

Reduction in repo interest rate india

Ranjith Kumar R

Author at Billianz

  • Feb 14, 2025
  • 5 min read
  • 28

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு:

இந்தியாவின் மொத்த பொருளாதாரம் நிதி நிறுவனங்களின் நிலைப்பாட்டினைப் பொறுத்தே நகர்கிறது. ரிசர்வ் வங்கி (RBI) இது தொடர்பான முக்கியமான மாற்றங்களை அவ்வப்போது அறிவிக்கிறது. இவற்றில் ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.5% இலிருந்து 6.25% ஆக குறைத்துள்ளது. இந்த மாற்றம் மக்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ரெப்போவட்டி என்றால் என்ன?

வங்கிகள் கடன் வழங்கும் போது, அவர்கள் தங்களுக்கே தேவையான பணத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனாக பெறுகின்றன. அந்த கடனுக்கு விதிக்கப்படும் வட்டியை ரெப்போ வட்டி என்று அழைக்கப்படுகிறது.

  1. ரெப்போ வட்டி அதிகரிக்கும்போது, வங்கிகள் கடன் பெறுவதில் அதிக செலவுகளைச் சந்திக்க வேண்டும். இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களிலும் வட்டி அதிகரிக்கும்.
  2. அதே நேரத்தில், ரெப்போ வட்டி குறைக்கப்படும் போது, வங்கிகளின் கடன் செலவு குறையும். இதனால், வீடு, வாகனம் போன்ற கடன்களின் வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு உள்ளது.

ரெப்போ வட்டிகுறைப்பு – தற்போதையநிலை

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.5% இலிருந்து 6.25% ஆகக் குறைத்துள்ளது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது 0.25% குறைவாக மாற்றப்பட்டுள்ளது. இது வங்கிகள் மற்றும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் முதல் முடிவு

இந்த முறை, ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 6 முறை ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் 6.5% ஆகவே வைத்திருந்த நிலையில், தற்போது 0.25% குறைத்து 6.25% ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் முக்கியத்துவம்

  1. கடன் வாங்குவோருக்கு நன்மை – வீடு, கார் மற்றும் கல்விக் கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், புதிய கடன்கள் எடுக்க மக்களுக்கு ஊக்கமளிக்கிறது.
  2. பணப்புழக்கம் அதிகரிப்பு – வங்கி கடன்கள் மலிவாகக் கிடைப்பதால், மக்களின் செலவினம் அதிகரிக்கும். இது சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.
  3. தொழில் வளர்ச்சிக்கு துணை – வட்டியின் குறைப்பால் தொழில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கே இது பெரும் பயனை தரும்.
  4. பணவீக்கம் கட்டுப்பாடு – பணவீக்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகும். ரெப்போ வட்டி குறையும்போது, பணவீக்கம் சீராக கட்டுப்படுத்தப்படும்.

முந்தைய வரலாறு மற்றும் தற்போதைய நிலைமைகள்

  1. 2020 ஆம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரெப்போ விகிதம் 4% ஆகக் குறைக்கப்பட்டது.
  2. 2022-ல் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதால், வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டது.
  3. தற்போதைய வட்டி விகிதக் குறைப்பு, 2025-26 நிதியாண்டில் 6.3% முதல் 6.8% வரை வளர்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்த மாற்றத்தால் யாருக்கெல்லாம் பயன்?

  1. கடன் வாங்கியுள்ளவர்களுக்கு – வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கு EMI குறைய வாய்ப்பு உள்ளது.
  2. தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் – வட்டி குறைந்ததால், தொழில்களும் முதலீடுகளும் அதிகரிக்கும்.
  3. நுகர்வோர் – பொருட்களின் விலை சீராக இருக்கும் என்பதால் மக்கள் செலவினம் அதிகரிக்கும்.

.

பங்குச்சந்தை மற்றும் ரூபாய் மதிப்பு மீது தாக்கம்

இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தையில் சிறிய வீழ்ச்சி காணப்பட்டது.

  1. சென்செக்ஸ் 87.32 புள்ளிகள் குறைந்து 77,970.84 புள்ளிகளாக காணப்பட்டது.
  2. நிஃப்டி 32.6 புள்ளிகள் சரிந்து 23,570.75 புள்ளிகளாக இருந்தது.
  3. இருப்பினும், நீண்ட காலத்தில் இது நேர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முடிவுரை

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கை முக்கியமானது. மக்கள் பயன்பெறுமாறு ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளதால், இது நேரடி மற்றும் மறைமுகமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவக்கூடும். குறுகிய காலத்திலாவது பங்குச் சந்தைக்கு சிறிய பாதிப்பு இருந்தாலும், நீண்ட கால வளர்ச்சிக்காக இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும். இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


No comments yet

Be the first to share your thoughts!

Your Views Please!

Your email address will not be published. Required fields are marked *

You may also like

blog image
After Independence
Jul 05, 2025
blog image
Moovalur Ramamirtham
Jul 05, 2025
blog image
Dr. Muthulakshmi Reddy
Jul 05, 2025