8 months ago|
General

Sathyamoorthy as Congress Leader

The Indian National Congress, colloquially the Congress Party, or simply the Congress, is a political party in India with deep roots in most regions of India. Founded on 28 December 1885, it was the first modern nationalist movement to emerge in the British Empire in Asia and Africa.

Ranjith Kumar R

Author at Billianz

  • Jul 05, 2025
  • 5 min read
  • 14

சத்தியமூர்த்தி

  1. சத்தியமூர்த்தி ஓர் காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரராவார்.
  2. இவர் புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் என்ற ஊரில் 1887-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் நாள் பிறந்தார்.
  3. சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.
  4. இவரது பேச்சாற்றல் திறமையைக் கண்ட காங்கிரஸ் 1919-ம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்கள் மற்றும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட, காங்கிஸின் பிரதிநிதியாக இவரை இங்கிலாந்து அனுப்பியது.
  5. இவர் இங்கிலாந்தில் இருந்த போது "தி இந்து" (The Hindu) ஆங்கில நாளிதழின் லண்டன் செய்தியாளராக 10 நாள் பணியாற்றினார்.
  6. 1930- ஆண்டு சென்னை பார்த்தசராதி கோயிலில் இந்தியப் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
  7. 1936- சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சத்தியமூர்த்தியும், அவரது சீடர் காமராஜர் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  8. 1939-ம் ஆண்டு இவர் சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சர்.ஆர்தர்ஹோப் உதவி யுடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  9. 1942- ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட அவர் 1943-ம் ஆண்டு மார்ச் 28-ம் நாள் சென்னை பொது மருத்துவமனையில், சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலேயே இறந்தார்.
  10. 1944-ம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் இந்த நீர்த்தேக்கத்திற்கு "சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்"என இவரது பெயரையே வைத்தார்.
  11. தீரர் என்றும், தீரர் சத்தியமூர்த்தி என்றும் அழைக்கப்பட்ட இவரின் நினைவாக 1987-ம் ஆண்டு நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.



No comments yet

Be the first to share your thoughts!

Your Views Please!

Your email address will not be published. Required fields are marked *

You may also like

blog image
After Independence
Jul 05, 2025
blog image
Moovalur Ramamirtham
Jul 05, 2025
blog image
Dr. Muthulakshmi Reddy
Jul 05, 2025