சத்தியமூர்த்தி
- சத்தியமூர்த்தி ஓர் காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரராவார்.
- இவர் புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் என்ற ஊரில் 1887-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் நாள் பிறந்தார்.
- சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.
- இவரது பேச்சாற்றல் திறமையைக் கண்ட காங்கிரஸ் 1919-ம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்கள் மற்றும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட, காங்கிஸின் பிரதிநிதியாக இவரை இங்கிலாந்து அனுப்பியது.
- இவர் இங்கிலாந்தில் இருந்த போது "தி இந்து" (The Hindu) ஆங்கில நாளிதழின் லண்டன் செய்தியாளராக 10 நாள் பணியாற்றினார்.
- 1930- ஆண்டு சென்னை பார்த்தசராதி கோயிலில் இந்தியப் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
- 1936- சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சத்தியமூர்த்தியும், அவரது சீடர் காமராஜர் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1939-ம் ஆண்டு இவர் சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சர்.ஆர்தர்ஹோப் உதவி யுடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- 1942- ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட அவர் 1943-ம் ஆண்டு மார்ச் 28-ம் நாள் சென்னை பொது மருத்துவமனையில், சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலேயே இறந்தார்.
- 1944-ம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் இந்த நீர்த்தேக்கத்திற்கு "சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்"என இவரது பெயரையே வைத்தார்.
- தீரர் என்றும், தீரர் சத்தியமூர்த்தி என்றும் அழைக்கப்பட்ட இவரின் நினைவாக 1987-ம் ஆண்டு நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.