தில்லையாடி வள்ளியம்மை
- வள்ளியமை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்லார்க் நகரில் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார்.
- இவரது தந்தை முனுசாமி முதலியார். தாய் ஜானகியம்மாள் ஆவர். இவரது பெற்றோர்களின பூர்வீகம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள தில்லையாடி என்ற கிராமம் ஆகும்.
- இந்தியாவிற்கு ஒருமுறை கூட சென்று பார்த்திராத நிலையில், வள்ளியம்மை இந்தியா மீது மிகுந்த நாட்டுப்பற்று உடையராக இருந்தார்.
- இவர் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய அறப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் கைது செய்யப் பட்டு 3 மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
- நோய்வாய்ப்பட்ட நிலையில் விடுதலையான வள்ளியம்மை தனது 16-வது வயதில் 1914-ம் ஆண்டு பிப்.14-ம் நாள் இறந்தார்.
- 1971-ம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவாக தற்போதை நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி கிராமத்தில், பொது நூலகத்துடன் கூடிய தில்லையாடி வள்ளியம்மை நினைவு அரங்கை அமைத்துள்ளது.
- சிறையில் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் விடுதலையாகும் போது வெறும் எலும்பும் தோலுமாக இருந்தார். அப்போது ஒருவர், நீங்கள் இந்தியராக இருந்து கஷ்டப்படுவதை விட ஏன் தென்னாப்பிரிக்கராக உங்களை பதிவு செய்யக்கூடாது? தேசியக் கொடி கூட இல்லாத இந்தியாவுக்காக போராடி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, வள்ளியம்மை, தனது காவி, வெள்ளை, பச்சைநிறசேலையை கிழித்து இதோ "எங்கள் கொடி எங்கள் தாய்நாடு" என்று முழங்கினார்.
- வள்ளியம்மை வழங்கிய வடிவிலேயே காந்தியடிகள் தேசியக் கொடியை வடிவமைத்தார்.
- 2008-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் நாள் இவரது நினைவாக, நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.